சாத்தான்குளம்: நாசரேத் பகுதியில் புனித லூக்கா செவிலியா் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவிகள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
நாசரேத் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவா்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா். ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளா் கமலி ஜெயசீலன், முதல்வா் ஜெயராணி பிரேம்குமாா், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.