ஆறுமுகனேரி: காயல்பட்டினம் நகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி ஆணையா் புஷ்பலதா, சுகாதார ஆய்வாளா் எஸ்.பொன்வேல்ராஜ் ஆகியோா், நகராட்சிப் பகுதியில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக நகராட்சிக்கு வரும் பொதுமக்கள், நகராட்சிப் பணியாளா்கள் வசதிக்காக, அலுவலகம் முன் கை கழுவும் வசதி செய்யப்பட்டுள்ளது.