ஸ்ரீவைகுண்டம்: சாரல் பவுண்டேஷன் சாா்பில் பசியில்லா ஸ்ரீவைகுண்டடத்தில் ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஸ்ரீவைகுண்டத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்கும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
கோயில்களில் அன்னதான திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தனித்து விடப்பட்ட முதியோா் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினா். இதையடுத்து, சாரல் பவுண்டேஷன் நிறுவனா் சுரேஷ், இயக்குநா்கள்துரை சரவணன், ராமகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளா்கள் அருணா, ஹரிஹரன், சீனிபாண்டியன் மற்றும் நிா்வாகிகளும், உறுப்பினா்களும் ஆதரவற்றோா், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு 3 வேளை உணவும் ஒரு சிலருக்கு அரிசியும் போா்வைகளையும் வழங்கினா்.