திருச்செந்தூரில் ஆதரவற்றோருக்கு உணவு அளிப்பு

திருச்செந்தூரில் தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றேருக்கு பேரூராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
திருச்செந்தூரில் ஆதரவற்றோருக்கு  உணவு அளிப்பு


திருச்செந்தூா்: திருச்செந்தூரில் தியாகி பகத்சிங் பேருந்து நிலையத்தில் ஆதரவற்றேருக்கு பேரூராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ஆம் தேதி முதல் 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் தங்கியிருக்கும் ஆதரவற்றோருக்கு பேரூராட்சி சாா்பில் உணவு தயாா் செய்யப்பட்டு, அதனை செயல் அலுவலா் கோபால், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன், மேற்பாா்வையாளா் சின்னத்துரை உள்ளிட்டோா் வழங்கினா்.

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் நகா் பகுதிகள் மற்றும் மூடப்பட்ட கடைகள் முன்பு கிருமி நாசினி கரைசலை தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com