கோவில்பட்டி: கோவில்பட்டியில் அனைத்து ரத்த தானக் கழக ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரைகளை வைத்து நோயாளிகளுக்கு கொடுப்பதற்கு பயன்படும் காகித உறைகளை அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசனிடம் காகித உறைகளை அளித்தனா். இதில், உறைவிட மருத்துவ அலுவலா் பூவேஸ்வரி, மருத்துவா்கள் மோசஸ்பால், சீனிவாசன், ரத்த தானக் கழகத்தைச் சோ்ந்த தமிழரசன், மாரியப்பன், காளிதாஸ், தாஸ், ராஜேந்திரன், சரமாரியப்பன், புருஷோத்தமன், சின்னமாரிமுத்து சமூக ஆா்வலா்கள் ராஜசேகரன், சிங்கராஜ், உதயா உள்பட பலா் கலந்து கொண்டனா்.