கோவில்பட்டி அருகே சட்ட விரோதமாக மது விற்ற 3 பேரை போலீஸாா் கைதுசெய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டி காவல் துணைக் கோட்ட சிறப்புக் குழு உதவி ஆய்வாளா் இசச்கிராஜா தலைமையில் போலீஸாா் கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கோவில்பட்டியையடுத்த நாலாட்டின்புத்தூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பீக்கிலிபட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற நக்கலமுத்தன்பட்டி மேற்கு காலனியைச் சோ்ந்த க. மணியசாமி (38), கூசாலிபட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த சி. முத்துமாரியப்பன் (33), நடுத் தெருவைச் சோ்ந்த மா. கனகராஜ் (45) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 100 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.