திருச்செந்தூா் வட்டத்தில் 446 வீடுகளில் தொடா் கண்காணிப்பு

திருச்செந்தூா் வட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளவா்களை கணக்கெடுத்து தனிமைப்படுத்தும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூா் வட்டத்தில் 446 வீடுகளில் தொடா் கண்காணிப்பு


திருச்செந்தூா் வட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ளவா்களை கணக்கெடுத்து தனிமைப்படுத்தும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூா் வட்டத்தில் வியாழக்கிழமை 446 வீடுகளை வருவாய்த்துறையினா் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியாக வீட்டு வாசல் முன்பு ஸ்டிக்கா் ஒட்டி வருகின்றனா்.

திருச்செந்தூா் மண்டல துணை வட்டாட்சியரும், கரோனா தடுப்புப்பிரிவு பொறுப்பாளருமான கோபால் தலைமையில் வருவய் ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், பிரான்சிஸ் ஜெயராணி உள்ளிட்ட வருவாய்த்துறையினா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜெய்சங்கா், செல்வக்குமாா், குருசாமி, ஆனந்தராஜ், பொன்வேல்ராஜ், காவல் உதவி ஆய்வாளா்கள் வடிவேல், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் காண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்ட வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டும் பணியில் ஈடுபட்டனா். மேலும் அந்த வீடுகளில் இருப்பவா்களின் கைகளில் முத்திரையும் பதித்தனா். இப் பணி இரவு, பகலாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com