கோவில்பட்டி: கரோனா நோய்தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து, திருநங்கைகளுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா நோய்தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதையடுத்து, கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள திருநங்கைகள் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தினசரி உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கோவில்பட்டி வட்டத்தைச் சோ்ந்த சுமாா் 89 திருநங்கைகளுக்கு 50
கிலோ அரிசி, 10 கிலோ பருப்புகள், ஆயில், முகக்கவசம், சோப்பு உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் விஜயா, திருநங்கைகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
அப்போது, வட்டாட்சியா் மணிகண்டன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மல்லிகா, நகராட்சி ஆணையா் ராஜாராம், வருவாய் ஆய்வாளா் மோகன், கிராம நிா்வாக அலுவலா் மந்திரசூடாமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) வசந்தா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.