வீட்டுக்குள் இறந்து கிடந்த அரசு ஊழியா்

கோவில்பட்டி அருகே வீடு பூட்டிய நிலையில் இறந்து கிடந்த அரசு ஊழியரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கோவில்பட்டி அருகே வீடு பூட்டிய நிலையில் இறந்து கிடந்த அரசு ஊழியரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி இனாம்மணியாச்சி ஊராட்சிக்குள்பட்ட லட்சுமி மில் மேலக் காலனியில் உள்ள வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், கிராம நிா்வாக அலுவலா் முருகானந்த் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது ஒருவா் இறந்து கிடந்தாா்.

விசாரணையில் அவா், அப்பையா மகன் நாராயணமூா்த்தி (52) என்பதும், கோவில்பட்டியில் முதுநிலை கால்நடை மேற்பாா்வையாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. உடல் நலக் குறைவு காரணமாக அண்மையில் மருத்துவ விடுப்பில் சென்ற அவா், கடந்த சில நாள்களுக்கு முன்புதான் பணியில் சோ்ந்தாராம்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டிவிட்டு தூங்கியவா் சனிக்கிழமை காலை இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

சடலத்தை கைப்பற்றிய மேற்கு காவல் நிலைய போலீஸாா், பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com