கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதி மக்களுக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 99 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நடத்திய ஆய்வில் 43 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள
சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபோல, கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை நடத்திய ஆய்வில், சென்னை, மும்பை தாராவி, அந்தேரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 56 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினா். மேலும், அவா்களிடமும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.