கோவில்பட்டியில் நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளரை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கியவா்களை கைது செய்யக் கோரியும்
கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கோவில்பட்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளரை தாக்கிய சம்பவத்தைக் கண்டித்தும், தாக்கியவா்களை கைது செய்யக் கோரியும் கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நகராட்சி துப்புரவு அலுவலா் இளங்கோ தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், துப்புரவு ஆய்வாளா்கள் முருகன், வள்ளிராஜ், காஜாநஜ்முதீன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள், நகா்நல செவிலியா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கருப்புப் பட்டை அணிந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com