விளாத்திகுளம்: எட்டயபுரம் அருகே குளத்துவாய்பட்டி அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழா்களுக்கு நலத்திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன் தலைமை வகித்து 33 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கனிகள், மளிகை பொருள்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் தனவதி, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினா் சீனி ராஜகோபால், ஜெயலலிதா பேரவை செயலா் சுபாஷ் சந்திரபோஸ், அகதிகள் முகாம் வருவாய் ஆய்வாளா் செந்தில் முருகன், அகதிகள் முகாம் செயலா் ரஜினிகாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.