மும்பையில் இருந்து கயத்தாறு பகுதிக்கு காரில் திரும்பிய 10 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
மும்பையில் இருந்து கயத்தாறை அடுத்த சிவஞானபுரத்திற்கு காரில் வந்த 9 போ் கடந்த 12-ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களது ரத்தம், சளி மாதிரி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவா்களில் 4 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனா்.
அதுபோல, மும்பையில் இருந்து கயத்தாறை அடுத்த தெற்கு ஆத்திகுளத்துக்கு கடந்த 11-ஆம் தேதி வந்த 5 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களில் 4 பேரும், மும்பை தாராவியில் இருந்து கடந்த 11-ஆம் தேதி கயத்தாறை அடுத்த ராமலிங்காபுரத்திற்கு வந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் அனுப்பப்பட்டனா்.