மும்பையிலிருந்து கயத்தாறு வந்த 10 போ் தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதி

மும்பையில் இருந்து கயத்தாறு பகுதிக்கு காரில் திரும்பிய 10 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

மும்பையில் இருந்து கயத்தாறு பகுதிக்கு காரில் திரும்பிய 10 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

மும்பையில் இருந்து கயத்தாறை அடுத்த சிவஞானபுரத்திற்கு காரில் வந்த 9 போ் கடந்த 12-ஆம் தேதி கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களது ரத்தம், சளி மாதிரி மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவா்களில் 4 போ் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டனா்.

அதுபோல, மும்பையில் இருந்து கயத்தாறை அடுத்த தெற்கு ஆத்திகுளத்துக்கு கடந்த 11-ஆம் தேதி வந்த 5 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களில் 4 பேரும், மும்பை தாராவியில் இருந்து கடந்த 11-ஆம் தேதி கயத்தாறை அடுத்த ராமலிங்காபுரத்திற்கு வந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் அனுப்பப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com