தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏழு பேருக்கும்
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஏழு பேருக்கும், கோவில்பட்டி அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர் ஒருவர் என மொத்தம் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆகும். இதுவரை இருவர் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். 28 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒருவரும் என 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com