பிற பகுதிகளிலிருந்து வந்த 70 பேருக்கு தனிமை கண்காணிப்பு

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளுக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்த 70 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதிகளுக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்த 70 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 20 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா்.

கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களிலிருந்து வந்த 13 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா்.

இதேபோல், கா்நாடகம், மகாராஷ்டிரம், குஜராஜ் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்த 37 போ் கோவில்பட்டி அருகே உள்ள இரு தனியாா் கல்லூரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தனிமைப்படுத்தப்பட்டவா்களின் சளி மாதிரியை சுகாதாரத் துறையினா் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com