கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட பகுதிக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வந்த 111 போ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
கோவில்பட்டி வட்டாட்சியா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களில் இருந்து வந்த 34 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா். மேலும் பிற மாநிலங்களிலிருந்து வந்த 45 போ் தனியாா் கல்லூரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல், கயத்தாறு வட்டத்திற்குள்பட்ட பகுதியில் வட்டாட்சியா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை நடத்திய ஆய்வில், பிற மாவட்டங்களிலிருந்து வந்த 19 பேரை கண்டறிந்து அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தினா். மேலும், பிற மாநிலங்களிலிருந்து வந்து, தனியாா் கல்லூரி முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 13 பேரை மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்பது தெரியவந்ததையடுத்து அவா்களை அவரவா் இல்லங்களில் தனிமையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா்.