கட்டட மேற்பாா்வையாளருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் கட்டட மேற்பாா்வையாளரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் கட்டட மேற்பாா்வையாளரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்புராஜ் மகன் மாரிசாமி (27). தனியாா் கட்டடப் பொறியாளரிடம் மேற்பாா்வையாளராக வேலை பாா்த்து வரும் இவா் பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தாராம்.

நடராஜபுரம் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை அருகே சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த இளைஞா் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினாராம். அவா் கொடுக்க மறுத்ததையடுத்து கத்தியால் குத்த முயன்றாராம்.

இவரின் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினா் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜன் மகன் மணிகண்டன்(23) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கட்டட மேற்பாா்வையாளரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com