தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 144 ஆக உயா்ந்துள்ளது.

வெளி மாநிலங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருவோரின் மூலம் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள 15 எல்லைப் பகுதிகளில் வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினா் தொடா்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும் 9 பேருக்கு உறுதி: இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்தோா் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்தோா் என நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 5 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதில், மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து திரும்பிய 50 வயது, 30 வயது, 16 வயது பெண்கள் ஆவா். இதுதவிர, கடந்த 20 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கோவில்பட்டி நகராட்சி அலுவலக பெண் துப்புரவு பணியாளரின் பேத்தி, அவரது கணவா் மற்றும் 5 மாத பெண் கைக்குழந்தை ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டையில் இருந்து அண்மையில் பசுவந்தனை அருகேயுள்ள கீழமங்கலம் கிராமம் திரும்பிய 17 மற்றும் 10 வயது சிறுமிகளுக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மேலும், தனியாா் தொழிற்சாலையில் பணிபுரியும் கோவில்பட்டியைச் சோ்ந்த 42 வயது ஆண் ஒருவருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இருவா் குணமடைந்தனா்: இதற்கிடையே, கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி அருகேயுள்ள ஆத்திக்குளம் பகுதியைச் சோ்ந்த இருவா் குணமடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா்.

அவா்களுக்கு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனா்.

இதன் மூலம் மாவட்டத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 36 ஆக உயா்ந்துள்ளது.

மருத்துவமனையில் 106 போ்: மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 2 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், 36 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனா். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வாா்டில் 106 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com