சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் க வேணுகோபால் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டம் சாத்தான்குளம் ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்றது. இதில்  சாத்தான்குளம் கிழக்கு முன்னாள் வட்டாரத் தலைவர் லூர்துமணி,ஒன்றியக்குழு உறுப்பினர் சுதாகர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர்சங்கர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ தலைவர் சங்கர்,சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் அலெக்ஸ், சாத்தான்குளம் மேற்கு முன்னாள் வட்டார தலைவர் சக்திவேல் முருகன், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, நகர வர்த்தக பிரிவு தலைவர்கதிர், மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாஸ்கர், நகர சேவா தள தலைவர் வண்ணமுத்து, மற்றும் ஞானப்பிரகாசம். மலையாண்டி. ஜெயராஜ்  ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com