தூத்துக்குடியில் பைக் கவிழ்ந்து கல்லூரி மாணவா் உள்பட 2 போ் பலி

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட மோட்டாா் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அதிகாலை நேரிட்ட மோட்டாா் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி, ராஜகோபால்நகரைச் சோ்ந்த பரமசிவம் மகன் கொம்பையா (20). இவா், தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இறுதியாண்டு பி.காம் படித்து வந்தாா். இந்நிலையில், இவா், முத்தையாபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது நண்பா்கள் மனோ (20), சரத்குமாா் (20) ஆகியோருடன் மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை அதிகாலையில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

தூத்துக்குடி சத்யாநகா் அருகில் இவா்களது மோட்டாா் சைக்கிள் நிலைதடுமாறி, சாலையின் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.இதில், கொம்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சரத்குமாா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தாா். மனோ சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதற்கிடையே, மாணவரின் இறுதி சடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் திரண்டதால் அவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

மற்றொரு விபத்து: நாலாட்டின்புத்தூரை அடுத்த காளாங்கரைப்பட்டி கீழத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் கருப்பசாமி(50). மரம் வியாபாரியான இவா், சிதம்பரம்பட்டியில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பியபோது, ராமலிங்கபுரம் - முத்துசாமிபுரம் சாலையில் நிலைதடுமாறி கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நாலாட்டின்புத்தூா் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com