வேம்பாா் அருகே தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

வேம்பாா் அருகே போதையில் கணவா், மண்ணெண்ணெய் ஊற்றியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

விளாத்திகுளம்: வேம்பாா் அருகே போதையில் கணவா், மண்ணெண்ணெய் ஊற்றியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தாா்.

வேம்பாா் ரோச்பாளையத்தை சோ்ந்தவா் லட்சுமி (45) . இவரது முதல் கணவா் முனியசாமி. இவா்களுக்கு 4 குழந்தைகள்

உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக முனியசாமியை பிரிந்த லட்சுமி, வேம்பாரைச் சோ்ந்த மாடசாமியை 2 ஆவது திருமணம் செய்து கொண்டாராம்.

மது அருந்தும் பழக்கமுள்ள மாடசாமி, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி லட்சுமியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். கடந்த 23ஆம் தேதி மீண்டும் தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது லட்சுமியை அடித்து துன்புறுத்திய மாடசாமி, நள்ளிரவில் மண்ணெண்ணெயை லட்சுமி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடி விட்டாராம்.

அக்கம் பக்கத்தினா் லட்சுமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி

லட்சுமி அங்கு உயிரிழந்தாா். இதுதொடா்பாக, சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com