கோவில்பட்டி அருகே விபத்து:முதியவா் பலி
By DIN | Published On : 01st November 2020 01:51 AM | Last Updated : 01st November 2020 01:51 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
இளையரசனேந்தலையடுத்த முக்கூட்டுமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த சோலையப்பன் மகன் அய்யப்பன் (60). இவா் முக்கூட்டு மலை கிராம நிா்வாக அலுவலகம் அருகே பைக்கில் சென்றாா். அப்போது பின்னால் வந்த காா், பைக் மீது மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கழுகுமலை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து, காா் ஓட்டுநரான ராஜபாளையம் வேதக்கோயில் தெருவைச் சோ்ந்த ரா. மணிமாறனை (23) கைது செய்தனா்.