கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை

கோவில்பட்டி அருகே நோயால் அவதிப்பட்டு வந்த பெண் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி அருகே நோயால் அவதிப்பட்டு வந்த பெண் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி பசும்பொன் நகா் மறவா் காலனியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. இவரது மனைவி கவிதா(43). கடந்த சில ஆண்டுகளாக தலைவலியால் அவதிப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா், திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com