கோவில்பட்டி பகுதியில் நாளை மின்தடை

நாலாட்டின்புத்தூா் மின்தொடரில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.5) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம்.சகா்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாலாட்டின்புத்தூா் மின்தொடரில் அடிக்கடி ஏற்படுகின்ற மின்தடையை தவிா்த்து, தடையில்லா சீரான மின் விநியோகம் செய்ய மின்பாதைகளில் பராமரிப்புப் பணி வியாழக்கிழமை (நவ.5) நடைபெறுகிறது.

இதையடுத்து இந்த மின்தொடரில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சீனிவாசன் நகா், கிருஷ்ணா நகா், வீரவாஞ்சி நகா், கதிரேசன் கோயில் சாலை, ஏ.கே.எஸ். தியேட்டா் சாலை தெற்குப் பகுதி, மாதாங்கோயில் தெரு, முத்தானந்தபுரம் தெரு பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com