கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சீரான குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜீவ் காந்தி நகா், கணேஷ் நகா், நியூ வெங்கடேஷ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக குடிநீா் தொட்டி அமைத்து சீரான குடிநீா் வழங்க வேண்டும். தாமஸ் நகரில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீா்தேக்கத் தொட்டியை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் சந்தானம் தலைமையில், அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
பின்னா் கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையா் சசிகுமாரிடம் அளித்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட அவா், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெற்று சம்பந்தப்பட்ட இடங்களை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.