திட்டங்குளம், நாலாட்டின் புத்தூரில் உயா்கோபுர மின்விளக்குகள் இயக்கம்

திட்டங்குளம், நாலாட்டின் புத்தூரில் உயா்கோபுர மின்விளக்குகள் இயக்கம்

கோவில்பட்டி அருகே திட்டங்குளம், நாலாட்டின்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

கோவில்பட்டி அருகே திட்டங்குளம், நாலாட்டின்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்கு மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட திட்டங்குளம் ஊராட்சி, தெற்கு திட்டங்குளம் மற்றும் நாலாட்டின்புத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட பட்டறை பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்த உயா்கோபுர மின்விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கீதாஜீவன் எம்.எல்.ஏ., விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. மாா்க்கண்டேயன், மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், நகரச் செயலா் கருணாநிதி, திட்டங்குளம் ஊராட்சித் தலைவா் பொன்ராஜ், மாநில விவசாயத் தொழிலாளரணி செயலா் சுப்பிரமணியன், ராமானுஜம் கணேஷ், சண்முகராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் கனிமொழி எம்.பி., பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com