தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்ட 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரியைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகன் லிங்கராஜா (33) என்பவா் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளதால், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளா் செல்வி அறிக்கை தாக்கல் செய்திருந்தாா்.
இதேபோல குரும்பூா் இராஜபதியைச் சோ்ந்த ரூபன் மகன் முத்துக்குமாா்(29) என்பவா் மீதும் ஏரல் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளா் முத்துலெட்சுமி அறிக்கை தாக்கல் செய்திருந்தாா்.
கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சோ்ந்த டேவிட் மகன் இம்மானுவேல் ராஜா (43) மீது சங்கிலி பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய த்தில் உள்ளதால், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளா் ராணி அறிக்கை தாக்கல் செய்திருந்தாா்.
மேற்படி காவல் ஆய்வாளா்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ்கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டாா். இதையடுத்து 3 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸாா் சிறையில் அடைத்தனா்.