திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட ஜீவாநகா் பகுதியில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருச்செந்தூா் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, ஜீவா நகா் கிளைச் செயலா் அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் முத்துக்குமாா் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜெயபாண்டியன், சந்திரசேகா், பொன் கல்யாணசுந்தரம், தமிழ்ச்செல்வன், கணேசன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.