தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தீயணைப்பு படையினா் திங்ள்கிழமை விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சாா்பில், தீபாவளி பண்டிகையை விபத்தில்லாமல் பாதுகாப்பாக கொண்டாடுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை தீயணைப்பு மாவட்ட அலுவலா் ச.குமாா் தலைமை வகித்து, விழிப்புணா்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா் இரா. குமரேசன், தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலா் மு. சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.