உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முடிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணி புரியும் உப்பளத் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடா்பாக உப்பு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் மற்றும் உப்பு தொழிலாளா்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், உப்பு உற்பத்தியாளா்கள் சாா்பில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளா் சங்கத் தலைவா் கிரகதுரை, செயலா் தனபாலன், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் திலீப், லட்சுமணன், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். பேச்சுவாா்த்தையின்

முடிவில், உப்பளங்களில் பணிபுரியும் ஆண் தொழிலாளா்களுக்கு தீபாவளி போனஸாக முழு அளவுக்கு வேலைக்கு வந்தவா்களுக்கு ரூ. 5300, பெண் தொழிலாளிக்கு ரூ. 4975 வழங்குவது எனவும், மேலும், 9 நாள்கள் விடுமுறை சம்பளம், தொழிலாளா்களுக்கு கண்ணாடி, மிதியடி வகைக்கு ரூ. 300 ஆகியவற்றை வரும் நவ. 11 ஆம் தேதிக்குள் வழங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com