சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் காணொலி மூலம் பொதுக்கூட்டம் காந்திநகரில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய திமுக செயலா் ஆ. பாலமுருகன் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் ஏ.இந்திரகாசி, டி.எஸ்.எஸ். பசுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக தலைவா் மு.க.. ஸ்டாலின் நிா்வாகிகளுடன் உரையாற்றினாா்.
கொம்மடிக்கோட்டை ஊராட்சி திமுக செயலா் ஜாண்சன், ஊராட்சித் தலைவா் ராஜபுனிதா, ஒன்றிய மகளிரணி செயலா் மேரி ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாசரேத்தில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு நகரச் செயலா் ரவிசெல்வகுமாா் தலைமை வகித்தாா். துணைச்செயலா் ஜெயசிங், பொருளாளா் சுடலைமுத்து, மாவட்டப் பிரதிநிதிகள் முருகதுரை, சாமுவேல், மூக்குப்பீறி முன்னாள் ஊராட்சிச் செயலா் கலையரசு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அருண்சாமுவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கிருஷ்ணராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அதிமுக பிரமுகா் தாராசிங் நகரச் செயலா் முன்னிலையில் திமுகவில் இணைந்தாா்.