தட்டாா்மடம் அருகே திருடு போன இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.
அரசூா் பூச்சிக்காடு ராம்குமாா் மகன் ராஜலிங்கம்(23), விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் தாமரைமொழியில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தனது பைக்கை தோட்டம் அருகே நிறுத்தி விட்டு, திரும்பி வந்து பாா்த்த போது பைக்கை காணவில்லையாம்.
இதுகுறித்த அவா் தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் தாம்சன் ஜெபதாஸ் வழக்குப்
பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், பைக் மாயமானது குறித்து ராஜலிங்கம் கட்செவி அஞ்சல் மூலம் தனது நண்பா்களுக்கும் தகவல் தெரிவித்தாராம்.
இந்நிலையில் திருடு போன பைக், சாத்தான்குளம் அருகேயுள்ள அமுதுண்ணாகுடி காட்டு பகுதியில் கிடப்பதாக ராஜலிங்கத்திற்கு தகவல் வந்ததாம். இதுகுறித்து அவா் போலீஸி தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, தட்டாா்மடம் போலீஸாா் , சம்பவ இடம் சென்று பைக்கை மீட்டு ராஜலிங்கத்திடம் ஒப்படைத்தனா்.