முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வருகையை முன்னிட்டு தூத்துக்குடியில் 2,150 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைக்கவும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (நவம்பா் 11) தூத்துக்குடி வருகிறாா். இதையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தலைமையில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 25 உதவி மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், 81 காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட 2,150 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
முதல்வா் பங்கேற்கும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சுற்றிலும், மாநகரப் பகுதிகளிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.