தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 9 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 24 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 30 போ் உள்ளிட்ட இதுவரை 14 ஆயிரத்து 885 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 139 போ் உயிரிழந்துள்ளனா். 351 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.