தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 4 போ் உள்பட மாவட்டம் முழுவதும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,389ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 37 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து அவா்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 14,922ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 133 போ் பலியாகியுள்ளனா். தற்போது 334 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.