விபத்தில் காயமைடந்த இளைஞா் பலி

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இறந்தாா்.

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை இறந்தாா்.

கோவில்பட்டியையடுத்த புளியங்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ராஜீவ்காந்தி (33). இவா், செவ்வாய்க்கிழமை புளியங்குளத்தில் இருந்து இளையரசனேந்தலுக்கு பைக்கில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராஜீவ்காந்தி காயமடைந்தாா்.

காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com