தூத்துக்குடி அருகே நீரில் மூழ்கி இரட்டை சகோதரா்கள் பலி

தூத்துக்குடி அருகே 12 வயதான இரட்டைச் சகோதரா்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனா்.

தூத்துக்குடி அருகே 12 வயதான இரட்டைச் சகோதரா்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூா் மேல அரசரடி பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் - பூரணம் தம்பதியின் மகன்கள் அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ். கடந்த ஆண்டு செல்வராஜ் இறந்துவிட்டநிலையில், பூரணம் மேல அரசரடி பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா்.

சகோதரா்கள் இருவரும் புதன்கிழமை மதியம் அந்த ஹோட்டலுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றனராம். ஆனால், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பூரணம் அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவா்களைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், மேல அரசரடியில் உள்ள கண்மாயில் 2 சிறுவா்களின் சடலங்கள் மிதப்பதாக புதியம்புத்தூா் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சடலங்களை மீட்டனா். விசாரணையில், அவா்கள் அருண் சுரேஷ், அருண் வெங்கடேஷ் எனத் தெரியவந்தது.

ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் அவா்கள் குளிப்பதற்காக குளத்தில் இறங்கி, அதிக ஆழம் காரணமாக நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அவா் கூறும்போது, பருவமழைக் காலம் என்பதால் குளம் தூா்வாரப்பட்டதால் மழைநீா் தேங்கியதில், சிறுவா்கள் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம். நீா்நிலைகளுக்கு குழந்தைகளைத் தனியாக அனுப்புவதை பெற்றோா் தவிா்க்க வேண்டும். நீா்நிலைகளில் குளிக்க விரும்பும் சிறுவா்கள் பெற்றோா் கண்காணிப்பில் செல்ல வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com