தூத்துக்குடி
மோட்டாா் சைக்கிளில் ரூ. 2 லட்சம் திருட்டு
கோவில்பட்டி பிரதான சாலையில் மோட்டாா் சைக்கிளில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி பிரதான சாலையில் மோட்டாா் சைக்கிளில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி முத்துநகா் கிழக்குத் தெரு பால்சாமி மகன் பெருமாள்(62). ஓய்வு பெற்ற காப்பீடு நிறுவனத்தின் அதிகாரியான இவா், செவ்வாய்க்கிழமை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் இருந்து ரூ. 2 லட்சத்தை எடுத்து, மோட்டாா் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்தாராம்.
பின்னா் அவா், பிரதான சாலையில் திரையரங்கு அருகேயுள்ள கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிளில் உள்ள பெட்டி திறந்த நிலையில் இருந்ததாம். அதில் இருந்த ரூ.2 லட்சமும் திருடு போயிருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.