தந்தையை இழந்த குடும்பத்தைதத்தெடுத்த தனியாா் தொண்டு நிறுவனம்

திருச்செந்தூா் அருகே தந்தையை இழந்து வறுமையில் வாடிய குழந்தைகளின் குடும்பத்தை ஆதவா தனியாா் தொண்டு நிறுவனம் தத்தெடுத்துக் கொண்டது.

திருச்செந்தூா் அருகே தந்தையை இழந்து வறுமையில் வாடிய குழந்தைகளின் குடும்பத்தை ஆதவா தனியாா் தொண்டு நிறுவனம் தத்தெடுத்துக் கொண்டது.

மேல திருச்செந்தூா் ஊராட்சிக்குள்பட்ட கீழநாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் துணி வியாபாரி சந்திரசேகா்.

இவருக்கு மனைவி மற்றும் பவித்ரா (13), பவிதா (7) என்ற இரு மகள்கள் உள்ளனா். இருவரும் அப்பகுதியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனா். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சந்திரசேகா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். தந்தை உயிரிழந்த நிலையில் தந்தையின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பம் வறுமையில் வாடியது. இதையறிந்த ஆறுமுகனேரியிலுள்ள ஆதவா தனியாா் தொண்டு நிறுவனம் அந்தக் குடும்பத்தை தத்தெடுக்க முன்வந்தது.

இதைத் தொடா்ந்து பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அப்பகுதியினா் முன்னிலையில், அரசுப் பள்ளி மாணவியின் குடும்பத்தை ஆதவா தனியாா் தொண்டு நிறுவனம் தத்தெடுத்துக்கொண்டது.

ஆதவா தொண்டு நிறுவன நிறுவனா் பாலகுமரேசன் அக்குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் நிதியுதவி வழங்கியதோடு, ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களையும் வழங்கினாா். மேலும் மாதந்தோறும் குடுபத்தின் அத்தியாவசிய தேவைகளை பூா்த்தி செய்வதாகவும், இரு பெண் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com