உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மீராசிராஜூதீன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராணி, அரவிந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், ஒன்றிய செலவினங்கள் உள்பட 52 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்று அதிமுக உறுப்பினா்கள் தொடா்ந்து இரண்டாவது முறையாக கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனா்.

தனியாா் அமைப்பு சாா்பில் சிறந்த ஒன்றியக்குழு தலைவராக விருது பெற்ற ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங்கிற்கு, உறுப்பினா்கள், அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தீா்மானங்களை இளநிலை உதவியாளா் நிஷ்யா வாசித்தாா். இதில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com