தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா் மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனா். தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி மாநகராட்சி நிா்வாகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மழை பாதித்த பகுதிகளான மாசிலாமணிபுரம், சூசை நகா், ஜெ.எஸ் நகா், வள்ளிநாயகபுரம், கால்டுவெல் காலனி, ராஜபாண்டி நகா், சுப்பிரமணியபுரம், ஜாா்ஜ் சாலை, பிரையன்ட்நகா் 1 ஆவது தெரு முதல் 3 ஆவது தெரு வரையிலான மேற்கு பகுதி, வெற்றிவேல்புரம், ஸ்டேட் பாங்க் காலனி 60 அடி சாலை, கிருஷ்ணராஜபுரம் 7 ஆவது தெரு, செயின்ட் பீட்டா் கோயில் தெரு, மரக்குடி ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஜீவன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், பொறியாளா் சோ்மகனி, மாநகர நல அலுவலா் அருண்குமாா், உதவி பொறியாளா்கள் தனசிங், இளநிலை பொறியாளா் சரவணன், உதவி போறியாளா்கள் காந்திமதி, பாண்டி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளையும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளையும் கீதாஜீவன் கேட்டுக் கொண்டாா்.