பெரியதாழை, வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ. 31.20 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் இன்று தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மற்றும் வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ. 31.20 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி புதன்கிழமை

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை மற்றும் வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ. 31.20 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி புதன்கிழமை (நவம்பா் 18) தொடங்குகிறது. இதில், மீன்வளத் துறை அமைச்சா் டி. ஜெயக்குமாா், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் ரூ. 30 கோடி மதிப்பிலும், வீரபாண்டியன்பட்டினத்தில் ரூ. 1.20 கோடி மதிப்பிலும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் அறிவித்து, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதற்கான பணிகள் தொடக்க விழா புதன்கிழமை (நவம்பா் 18) பகல் 11.30 மணிக்கு பெரியதாழையிலும், 12.30 மணிக்கு வீரபாண்டியன்பட்டினத்திலும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளில், அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், கடம்பூா் செ.ராஜு ஆகியோா் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைக்கின்றனா்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலை 10 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வரும் அமைச்சா் டி.ஜெயக்குமாருக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. நிகழ்ச்சிகளில் அதிமுக நிா்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com