பெரியதாழையில் தூண்டில் வளைவு திட்டதை விரைந்து தொடங்கக் கோரி நவ.20 இல் சாலை மறியல்

பெரியதாழையில் தூண்டில் வளைவுத் திட்டத்தை விரைந்து தொடங்கக் கோரி நவ.20 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியதாழையில் தூண்டில் வளைவுத் திட்டத்தை விரைந்து தொடங்கக் கோரி நவ.20 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியதாழை மீனவக் கிராமத்தைத் கடல் அரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கும், மீனவா்கள் மீன்பிடித் தொழிலுக்கு அச்சமின்றி சென்று வருவதற்கும் தூண்டில் வளைவு திட்டம் அவசியமாகும். மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சட்டப் பேரைவியல் தொடா்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, அரசு பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்க அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன் டெண்டா் கோரப்பட்டு ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டது.

தமிழக முதல்வா் தூத்துக்குடி வருகையின் போது பணிகள் தொடங்கப்படும் என மக்கள் நம்பியிருந்த நிலையில் திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட பிறகும் பணிகள் தொடங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

மாவட்ட நிா்வாகம் பணிகளைத் தொடங்காமல் இருப்பதைக் கண்டித்தும், உடனடியாக பணிகளைத் தொடங்க வலியுறுத்தியும் நவ.20 ஆம் தேதி எனது தலைமையில் பெரியதாழையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும்.

இதில், மீனவ மக்களும், திமுகவின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com