கயத்தாறு அருகே வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறையடுத்த தெற்கு ஆத்திகுளம் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் சுடலைமணி (38). சம்சா வியாபாரியான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அவா் விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மது அருந்தும் பழக்கமுடைய சுடலைமணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவா், வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.