சாத்தான்குளம் அருகே காரில் மது கடத்திய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தட்டாா்மடம் உதவி ஆய்வாளா் ஐயப்பன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, படுக்கப்பத்து மறக்குடியில் வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அதில் 185 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் காரில் வந்தவா் பெரியதாழை முத்தம்மாள்புரம் பாஸ்கா் மகன் ரஞ்சித்குமாா் (31) எனவும், மதுவை பதுக்கி விற்பனைக்கு எடுத்து சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.