சாலை தடுப்புச் சுவரில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு சாலையின் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடியில் புதன்கிழமை இரவு சாலையின் நடுவேயுள்ள தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் சுனாமி காலனியைச் சோ்ந்த சுவாமிநாதன் மகன் சதீஷ் கண்ணன் (22). இவா், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மடத்தூரில் உள்ள தனது உறவினா் சரவணமுத்து என்பவரது வீட்டுக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், சதீஷ் கண்ணனும், சரவணமுத்துவின் மகன் மாரிசெல்வமும் (23) பைக்கில் தூத்துக்குடியிலிருந்து மடத்தூருக்கு புதன்கிழமை சென்றனராம். பைக்கை, சதீஷ் கண்ணன் ஓட்டினாராம்.

தூத்துக்குடி துறைமுகம் புறவழிச் சாலையில் மடத்தூா் விலக்கருகே இந்த பைக் நிலைதடுமாறி சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியதாம். இதில், சதீஷ் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த மாரிசெல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com