தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொளி காட்சி மூலம் நவ. 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கான நவம்பா் மாதத்துக்கான குறைதீா் நாள் கூட்டம் ‘காணொளி காட்சி மூலம் நவ. 26 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டு, காணொளி காட்சி மூலம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும், தங்கள் கோரிக்கை மனுக்களை நவ. 26 ஆம் தேதி, அல்லது அதற்கு முன்னதாக தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மூலம் பெறப்பட்டு, உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவா்களிடமிருந்து உரிய பதில் விவசாயிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.