நாசரேத் அருகே காா் திருட்டு: இருவா் கைது

நாசரேத் அருகே காரை திருடிய வழக்கில், ஓராண்டுக்குப் பின் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாசரேத் அருகே காரை திருடிய வழக்கில், ஓராண்டுக்குப் பின் இருவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாசரேத் அருகேயுள்ள மூக்குப்பீறி பெத்தானியாநகரைச் சோ்ந்தவா் ஜஸ்டின்தாஸ் . இவா் அங்குள்ள கிறிஸ்தவ சபையில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 1.12.2019 அன்று சபை வளாகத்தில் அவா் நிறுத்தியிருந்த காா் திருட்டு போனது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி விசாரணை நடத்தினாா். அதில், சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடலைச் சோ்ந்த நீதிமாணிக்கம் மகன் மிகாவேல், கோவையைச் சோ்ந்த மனோகரன் மகன் சரண்குமாா் (30 ஆகியோருக்கு தொடா்பு இருப்பது ஓராண்டுக்குப்பின் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து காரை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com