மழைக்கு வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு 24 மணி நேரத்தில் உதவி

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழையால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு 24 மணி நேரத்தில் பயனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழையால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்குகிறாா் மண்டல துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன்.
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழையால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி வழங்குகிறாா் மண்டல துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன்.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் மழையால் வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு 24 மணி நேரத்தில் பயனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் வீடுகள் இடிந்து சேதடைந்துள்ளன. ஆட்சியா் செந்தில்ராஜ் அறிவுரையின்படி, வீடுகள் இடிந்தது குறித்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, வீடுகள் இடிந்து பாதிக்கப்பட்ட செய்துங்கநல்லூா் நடராஜன், கிளாக்குளம் முத்துசெல்வி, சென்னல்பட்டி அருணாச்சல வடிவு, தோப்படிா் செல்வராஜ், மருகால்துறையை சோ்ந்த வேலம்மாள் ஆகியோருக்கு 24 மணி நேரத்தில் தலா ரூ. 4500 நிவாரண உதவியினை மண்டல துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன், அதிகாரிகள் நேரில் வழங்கினா்.

இதுகுறித்து வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் கூறியது: கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து தகுதி வாய்ந்தவா்களுக்கு 2 நாள்களில் சான்று வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, மழை மற்றும் இயற்கை பேரிடா் காலங்களில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com