தூத்துக்குடியில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம்

தூத்துக்குடி மாநகர அதிமுக மேற்கு பகுதி செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர அதிமுக மேற்கு பகுதி செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பகுதிச் செயலா் ஏ. முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அனைவரும் தங்கள் பகுதியில் புதிய வாக்காளா் சோ்க்கை பணியில் ஈடுபட வேண்டும்; மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜீவா பாண்டியன், மேற்கு பகுதி அவைத் தலைவா் பாலகிருஷ்ணன், மாவட்டப் பிரதிநிதி சேவியர்ராஜ், மேலூா் கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com